languageIcon
search
search
beforeFajronColorIcon / முன்னுரை./ ( முறைகள் 3 ஸுன்னத்துக்கள் )
brightness_1 ஸுன்னாவை கடைபிடிப்பதில் முன்னோர் காட்டிய ஆர்வத்திற்கான சான்றுகள்

இமாம் முஸ்லிம் அவர்கள் இந்த ஹதீஸை பதிவு செய்கிறார்கள்.அந்நுஃமான் பின் ஸாலிம் அவர்கள் அம்ர் பின் அவ்ஸ் அவர்களை தொட்டும் கூறுகின்றார்.எனக்கு அன்பஸா பின் அபீ ஸுப்யான் அவர்கள் கூறினார்.இதை எனக்கு உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்.அதில் நான் நபிகளார் கூறியதை கேட்டேன்.முஸ்லிமான ஒரு அடியான் அல்லாஹ்வுக்காக தினமும் பர்ழ் -கட்டாயம்- அல்லாத சுன்னத்தான தொழுகைகள் 12 ரக்அத்துக்கள் தொழுது வந்தால் அவருக்கு சுவனத்தில் ஒரு வீடு கட்டப் படும்’ என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அவர்களின் மனைவி உம்மு ஹபீபா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்:1727).உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்"நான் இதை நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து கேட்டது முதல் இச்செயலை நான் விட்டதேயில்லை.மேலும் அன்பஸா அவர்கள் கூறுகின்றார் நான் இதை உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹா அவர்களி டமிருந்து கேட்டது முதல் நான் இதை விட்டது கிடையாது என.

மேலும் அம்ர் பின் அவ்ஸ் அவர்கள் "நான் இதை அன்பஸா விடமிருந்து கேட்டது முதல் விட்டதே கிடையாது" என.

மேலும் அந்நுஃமான் பின் ஸாலிம் அவர்கள் குறிப்பிடுகின்றார் நான் இதை அம்ர்பின் அவ்ஸிடமிருந்து கேட்டது முதல் கைவிட் டதில்லை என.

அலீ இப்னு அபீ தாலிப் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கின் றார்கள்.(என் துணைவியர்) ஃபாத்திமா அவர்கள் (மாவு அரைக்கும்) திரிகை சுற்றியதால் தம் கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (என்னிடம்) முறையிட்டார்.இது தொடர்பாக நபியவர் களிடம் தெரிவிக்கும் படி கூறினேன்.எனவே,ஒரு பணியாளரை (தமக்குத் தரும்படி) கேட்க நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஃபாத்திமா சென்றார்கள்.ஆனால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அப்போது வீட்டில் இல்லாததால் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் அது பற்றிக் கூறி (விட்டுத் திரும்பலா)னார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வந்தவுடன் அவர்களிடம் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் விஷயத்தை தெரிவித்தார்கள்.உடனே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் படுக்கைக்குச் சென்றிருந்தோம் (அவர் களைக் கண்டவுடன்) நான் எழுந்திருக்க முற்பட்டேன்.உடனே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,' (எழுந்திருக்க வேண்டாம்) அந்த இடத்திலேயே இருங்கள்' என்று கூறிவிட்டு எங்களுக்கு நடுவில் வந்து அமர்ந்தார்கள்.அப்போது (என்னைத் தொட்டுக் கொண்டிருந்த) அவர்களின் பாதங்களின் குளிர்ச்சியை என்னுடைய நெஞ்சின் மீது உணர்ந்தேன்.(அந்த அளவுக்கு நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள்.)'பணியாளரை விட உங்களிருவருக்கும் (பயனளிக்கும்) சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?நீங்கள் இருவரும் 'படுக்கைக்குச் சென்றதும்' அல்லது 'விரிப்புக்குச் சென்றதும்' அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்) என்று முப்பத்து நான்கு முறையும்,சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று முப்பத்து மூன்று முறையும்,அல்ஹம்து லில்லாஹ் (புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே) என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள்.இது பணியாளைவிட உங்கள் இரு வருக்கும் சிறந்ததாகும்.என்றார்கள்.(நூல் புகாரி-3705,முஸ்லிம் எண் -2727)

இன்னொரு அறிவிப்பில் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், "இவ்வாறு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய நாளிலிருந்து அதை நான் ஓதாமல் விட்ட தில்லை"என்று சொன்னார்கள்.அப்போது "ஸிஃப்பீன் போர் நடைபெற்ற இரவில் கூடவா?" என்று கேட்கப்பட்டது.அதற்கு அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்,"ஸிஃப்பீன் போர் நடை பெற்ற இரவில்கூட இதை ஓதாமல் இருந்ததில்லை" என பதிலளித்தார்கள்.(நூல்,புகாரி,எண் -5362,முஸ்லிம், எண்-2727)

இங்கு குறித்துக்காட்ட வேண்டிய விடயம் இந்த "ஸிஃபிஃபீன்" யுத்தம் இடம்பெற்ற இரவின் போது இதன் படைத்தளபதியாக அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்தார்கள்.இருந்த போதிலும் கூட-இக்கட்டான இச்சூழலில் கூட-இந்த ஸுன்னத்தான வழிமுறையை அவர்கள் கைவிடவில்லை என்தாகும்.

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜனாஸாத் தொழுகையில் களந்து கொண்டு அத்தொழுகை முடித்தவுடன் மண்ணறைக்கு மையித்தை அடக்கும் வரை செல்லாது திரும்பி விடுவார்கள்.இவர்கள் இதுதான் பரிபூரணமான ஸுன்னத்தான வழி முறை என எண்ணிக் கொண்டிருந்தமையே இதற்கான காரணியாகும்.மேலும் அடக்கும் வரை செல்வதன் சிறப்பை அறிந்திருக்கவில்லை.எனினும் பின்னர் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸ் அவர்களுக்கு எட்டிய போது அவர்களுக்கு ஸுன்னத்தான வழிமுறை தப்பி போனதையிட்டு மிகவும் கவலைப் பட்டார்கள்.அதன் பின் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை சிறிது அவதானித்துப் பாருங்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், பள்ளிவாசல் தரையில் கிடந்த சிறு கற்களில் ஒரு கைப்பிடியளவு அள்ளி தமது கையில் வைத்து கிளறிக் கொண்டிருந்தார்கள்.பின்னர் செய்தி கிடைத்த பின்னர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தமது கையிலிருந்த சிறு கற்களை கீழே எறிந்து விட்டு,"நாம் ஏராளமான "கீராத்" (நன்மை)களை தவற விட்டு விட்டோம்" என்று கூறினார்கள்.(நூல் முஸ்லிம் எண்-1323, முஸ்லிம்,எண்-945)

இமாம் நவவி ரஹ்மதுல்லாஹ் அவர்கள் குறிப்பிடும் போது இதில் நபித்தோழர்களுக்கு ஸுன்னத்தான விடயங்கள் பற்றிய அம்சங்கள் அவர்களை வந்தடையும் போது அவர்கள் அவற்றை பின் பற்றுவதன் மீது கொண்டிருந்த ஆவலும்,கரிசணை யையும் எடுத்துக் காட்டுவதுடன்,அவர்களை அறியாது கூட ஒரு ஸுன்னத்தான வணக்கம் தப்பி விடும் போது அவர்களுக்கு ஏற்பட்ட மனக் கவலையையும்,சஞ்சலத்தையும் எடுத்துக் காட்டுகிறது.(பார்க்க-அல் மின்ஹாஜ் 7/15).

brightness_1 ஸுன்னத்தான வழிமுறைகளை பின்பற்றுவதன் பயன்கள்

அன்புச்சகோதரா-நிச்சயம் ஸுன்னத்தான வழிமுறைகளை பின்பற்று வதனால் அதிகப்பயன்கள் உள்ளன.அவற்றுள் சில பின் வருமாறு:

1-அல்லாஹ்வின் அன்பு,நேசம் ஆகியவற்றில் உயர் அந்தஸ்தை அடைதல்.ஆகவே ஒரு அடியான் அல்லாஹ்வை உபரியான வணக் கங்களால் அவனை நெறுங்கும் போது அவனுக்கு அல்லாஹ்வின் நெறுக்கமும் அன்பும் நேசமும் கிட்டுகிறது.

இமாம் இப்னு கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடும் போது திடமாக  அல்லாஹ் அவனின் நேசத் துகுரியவரை அகத்தாலும் புறத்தாலும் நேசிக்காத வரையிலும், உம்மை அவன் நேசிக்க மாட்டான்,மேலும் அவரை உண்மை படுத்தாதும்,அவருக்கு கட்டுப்படாதும்,அவருக்கு கட்டுப் படுவதை மேலாக  கருதாத வரைக்கும், அவரின் தீர்ப்பை ஏனையவரின் தீர்ப்பை விட முற்படுத்தாமலும்.இருக்க வேண்டும்.அவ்வாறு இல்லை எனின் நீ நாடியாவாறு மீள் பரிசீலணை செய்து நீ வெளிச்சத்தை தேடிப்பார் உன்னிடத்தில் அதில் ஒன்றுமே கிடைக்கப்பெற மாட்டாய். (பார்க்க-மதாரி ஜுஸ்ஸாலிகீன்- 3/37).  

2-அல்லாஹ் அடியானுடனிருத்தலும்,அல்லாஹ் அவருக்கு நல்ல வைகளுக்கு வழிகாட்டுவான்.அவரின் உடலுறுப்புக் களினால் இறைவன் விரும்புகின்றவைகள் மாத்திரம் தான் இடம்பெறும். ஏனெனில் அல்லாஹ் அவருடன் இருக்கின்றான். 

3-அல்லாஹ்வின் நேசத்தினால் அடியானின் பிராரத்தனைகள் அங்கி கரிக்கப்படல்.ஏனெனில் ஸுன்னத்தான உபரியான வழிமுறைகளினூடாக அல்லாஹ்வை நெறுங்கும் போது அல்லாஹ்வின் நேசம் கிட்டுகிறது.அவனின் நேசம் கிடைக்கும் போது அவரின் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப் படுகின்றன.

இம்மூன்று பயன்களையும் அறிவிக்கும் சான்றாக பின்வரும் ஹதீஸ் அமைகிறது.

அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்:யார் எனது நேசரை பகைத்து கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன்.நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகிறான்.அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும்.எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக் கிறான்.அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன்.நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும்,அவன் பார்க்கின்ற பார்வையாகவும்,அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன்.அவன் என்னிடம் கேட்டால்,நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன்.முஃமினுடைய உயிரைக் கைப் பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை.(ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான்.நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன்.(நூல், புகாரி,எண் :6502)

4-கட்டாய பர்ளான செயல்களில் ஏற்படுகின்ற குறைகள், தவறுகள் இத்தகைய உபரியானவைகளினால் நிவர்த்தி செய்யப்படுகின்றன.ஏனெனில் உபரியானவைகளினால் பர்ளா னவைகளின் குறைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன.

இதற்கான சான்று பின்வருமாறு.

அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக் கிறார்கள். நான் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்.அவர்கள் கூறினார்கள் "மறுமை நாளில் ஒரு அடியானின் வணக்கங்களில் முதலில் கேட்கப்படுவது தொழுகை பற்றியதாகும்.இது சீரானதாக இருந்தால் அவர் சீர் பெற்று வெற்றியும் பெற்று விட்டார்,மேலும் ஒருவரின் தொழுகை சீர்கெட்டிருந்தால் அவர் சீர் கெட்டு நஷ்டமடைந்து விட்டார்.ஒரு கட்டாயாமான பர்ளான ஒன்றில் ஏதும் குறைகள் இருப்பின் திடமாக மகத்துவமிக்க அல்லாஹ் கூறுவான்."இந்த எனது அடியானுக்கு ஏதும் உபரியான வணக் கங்கள் உண்டா...?என இவ்வாறு ஏதும் ஸுன்னத்தான உபரியான வணக்கங்கள் இருப்பின் அதை கொண்டு குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.இவ்வாறே மற்றைய அனைத்து வணக் கங்களும் சீர் செய்யப்படும்.(அதாரம்,அஹ்மத்,எண்,9494,அபூ தாவுத்,எண்,864,அத்திர்மிதி.எண்,413,இதை இமாம் அல்பானி அவர்கள் ஒரு ஸஹீஹான ஹதீஸ் என ஸஹீஹுல் ஜாமிஃ இல் குறிப்பிட்டுள்ளார்கள். 1/405).